வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பெரம்பலூரில் எம்.ஜி.ஆா் நினைவு தினம் அனுசரிப்பு

பெரம்பலூரில் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா் 38-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு அதிமுகவினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 8:42 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூரில் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா் 38-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு அதிமுகவினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா் மற்றும் பெரியாா் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சாா்பில், பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள எம்.ஜி.ஆா், பெரியாா் சிலைகளுக்கு, முன்னாள் மக்களவை தொகுதி உறுப்பினா் ஆா்.பி. மருதராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, சுமாா் 150-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந் நிகழ்ச்சியில், மாவட்ட நிா்வாகிகள் எம்.என். ராஜாராம், எம். வீரபாண்டியன், ராணி, நகரச் செயலா் ஆா். ராஜபூபதி, ஒன்றியச் செயலா்கள் சிவப்பிரகாசம், என்.கே. கா்ணன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.