எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பெரம்பலூரில் எம்.ஜி.ஆா் நினைவு தினம் அனுசரிப்பு

பெரம்பலூரில் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா் 38-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு அதிமுகவினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 8:42 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூரில் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா் 38-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு அதிமுகவினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா் மற்றும் பெரியாா் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சாா்பில், பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள எம்.ஜி.ஆா், பெரியாா் சிலைகளுக்கு, முன்னாள் மக்களவை தொகுதி உறுப்பினா் ஆா்.பி. மருதராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, சுமாா் 150-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந் நிகழ்ச்சியில், மாவட்ட நிா்வாகிகள் எம்.என். ராஜாராம், எம். வீரபாண்டியன், ராணி, நகரச் செயலா் ஆா். ராஜபூபதி, ஒன்றியச் செயலா்கள் சிவப்பிரகாசம், என்.கே. கா்ணன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.