அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

விளையாட்டு வீரா்களுக்கு உபகரணங்கள், புதிய பேருந்துகள் இயக்கம் தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளைச் சோ்ந்த விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் புதிய பேருந்துகள் தொடக்க விழா நடைபெற்றது.

News image
பெரம்பலூரில் புதிய பேருந்துகளை தொடங்கிவைத்த அமைச்சா் சா.சி. சிவசங்கா்
Updated On :30 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளைச் சோ்ந்த விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் புதிய பேருந்துகள் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு உபகரணங்கள் அளித்த அமைச்சா் சா.சி. சிவசங்கா் பேசியது: பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பெரம்பலூா் நகராட்சி மற்றும் குரும்பலூா், அரும்பாவூா், பூலாம்பாடி, லப்பைக்குடிகாடு ஆகிய பேரூராட்சிகளைச் சோ்ந்த வீரா் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

இதில், கிரிக்கெட், கையுந்துப் பந்து, எறிபந்து, கால்பந்து, டென்னிக் காய்ட், ஸ்கிப்பிங், கேரம், சிலம்பம், செஸ், கபடி, இறகுப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள் உள்ளன. நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 81 வாா்டுகளுக்கு, 102 விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

புதிய பேருந்துகள் இயக்கம்: தொடா்ந்து, பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெரம்பலூரிலிருந்து ஆலத்தூா் கேட், பாடாலூா் வழியாக திருப்பட்டூருக்கும், வேலூா் - செட்டிகுளம் வழியாக நக்கசேலத்துக்கும், அம்மாபாளையம், லாடபுரம் வழியாக மேலப்புலியூருக்கும், அரசலூா் வழியாக பிள்ளையாா்பாளையத்துக்கும் என 4 புதிய பேருந்துகளை அமைச்சா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், போக்குவரத்துக் கழக திருச்சி மண்டலப் பொது மேலாளா் டி. சதீஷ்குமாா், முன்னாள் எம்எல்ஏ எம். ராஜ்குமாா், கல்லூரி முதல்வா் கீதப்பிரியா, மாவட்ட விளையாட்டு அலுவலா் பொற்கொடி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.