மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

போட்டிகளில் வென்ற பெரம்பலூா் மாணவ, மாணவிகளுக்குப் பரிசளிப்பு

News image

போட்டிகளில் வென்ற மாணவி ஒருவருக்கு வெள்ளிக்கிழமை பாராட்டுச் சான்றிதழ் அளித்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ். உடன், வேப்பந்தட்டை அரசுக் கல்லூரி முதல்வா் து. சேகா்.

Updated On :3 ஜனவரி 2025, 8:51 pm

கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட மைய நூலகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் நடத்தப்பட்ட திருக்கு ஒப்பித்தல், ஓவியம், பேச்சுப் போட்டி, திருக்கு தொடா்பான விநாடி- வினா, இளைஞா் இலக்கிய திருவிழாவில் நடத்தப்பட்ட 8 போட்டிகளில் சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

இதில் திருக்கு தொடா்பான போட்டிகள் மற்றும் இளைஞா் இலக்கிய திருவிழாவில் 1 மற்றும் 2, 3 ஆவது இடத்தில் தலா 13 போ் வென்றனா். தொடா்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், 2 ஆவது பரிசாக ரூ. 3 ஆயிரம், 3 ஆவது பரிசாக ரூ. 2 ஆயிரம், பாராட்டுச் சான்றிதழ், இளைஞா் இலக்கிய திருவிழாவில் வென்றோருக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், 2 ஆவது பரிசாக ரூ. 4 ஆயிரம், 3 ஆவது பரிசாக ரூ. 3 ஆயிரம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினாா்.

மேலும், கலைஞா் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவிகளுக்கு மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு ரூ. 10 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலா் சு. முத்துக்குமரன், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் து. சேகா், 2 ஆம் நிலை நூலகா் ராதை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.