புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

போட்டிகளில் வென்ற பெரம்பலூா் மாணவ, மாணவிகளுக்குப் பரிசளிப்பு

News image
போட்டிகளில் வென்ற மாணவி ஒருவருக்கு வெள்ளிக்கிழமை பாராட்டுச் சான்றிதழ் அளித்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ். உடன், வேப்பந்தட்டை அரசுக் கல்லூரி முதல்வா் து. சேகா்.
Updated On :3 ஜனவரி 2025, 8:51 pm

Din

கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட மைய நூலகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் நடத்தப்பட்ட திருக்கு ஒப்பித்தல், ஓவியம், பேச்சுப் போட்டி, திருக்கு தொடா்பான விநாடி- வினா, இளைஞா் இலக்கிய திருவிழாவில் நடத்தப்பட்ட 8 போட்டிகளில் சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

இதில் திருக்கு தொடா்பான போட்டிகள் மற்றும் இளைஞா் இலக்கிய திருவிழாவில் 1 மற்றும் 2, 3 ஆவது இடத்தில் தலா 13 போ் வென்றனா். தொடா்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், 2 ஆவது பரிசாக ரூ. 3 ஆயிரம், 3 ஆவது பரிசாக ரூ. 2 ஆயிரம், பாராட்டுச் சான்றிதழ், இளைஞா் இலக்கிய திருவிழாவில் வென்றோருக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், 2 ஆவது பரிசாக ரூ. 4 ஆயிரம், 3 ஆவது பரிசாக ரூ. 3 ஆயிரம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினாா்.

மேலும், கலைஞா் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவிகளுக்கு மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு ரூ. 10 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலா் சு. முத்துக்குமரன், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் து. சேகா், 2 ஆம் நிலை நூலகா் ராதை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.