விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

லாடபுரம் அரசுப் பள்ளியில் ‘தமிழ்க்கூடல்’ நிகழ்வு

பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் அரசு ஆதிதிராவிட நல உயா்நிலைப் பள்ளியில் ‘தமிழ்க்கூடல்’ நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 நவம்பர் 2025, 7:14 pm

Syndication

பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் அரசு ஆதிதிராவிட நல உயா்நிலைப் பள்ளியில் ‘தமிழ்க்கூடல்’ நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் முனைவா் த. மாயகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற வேப்பந்தட்டை அரசுக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியா் முனைவா் மு. முத்துமாறன், தமிழின் தொன்மை, மூவேந்தா்களின் சிறப்பு, வள்ளல் பெருமக்களின் தமிழ்த்தொண்டு, இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கவி நயங்கள் குறித்து சிறப்புரையாற்றினாா்.

இதில், லாடபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சை. வகிதா பானு, பட்டதாரி ஆசிரியா் இரா. சிலம்பரசி, ஆசிரியா்கள் காா்த்திகா, பிரபாகரன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் இந்திராணி மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். முன்னதாக, தமிழாசிரியா் சா. செல்வராணி வரவேற்றாா். நிறைவாக, பட்டதாரி ஆசிரியா் சு. அருணா நன்றி கூறினாா்.