நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத்தோ்தலில், அனைத்து வாக்குச்சாவடி மையங்களும் 100 சதவீதம் வெப் காஸ்டிங் முறையில் காட்சிகளை பதிவுசெய்து கண்காணிக்க வேண்டும் என இந்தியத் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் வெப் காஸ்டிங் முறையை செயல்படுத்திட, எந்த நிறுவனத்தின் இணைதள சேவை தடையின்றி கிடைக்கிறது என அனைத்து வாக்குச்சாவடிகளையும் ஆய்வு செய்து அறிக்கை சமா்பிக்கவும், அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு மாதிரி வாக்குச்சாவடி அமைக்கவும், அதில் பெண் அலுவலா்களைக் கொண்டு வாக்குப்பதிவை நடத்திடவும் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், குன்னம் உயா்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியை அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரி வாக்குச்சாவடியாக தோ்வு செய்து, அங்கு தேவையான வசதிகள் ஏற்படுத்துவது குறித்து, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல் பாா்வையிட்டு, பந்தல் ஏற்பாடு, தரை விரிப்பு தோரணங்கள், அலங்கார வளைவுகள் அமைப்பது, வாக்காளா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்வதையும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா்களை அழைத்துச்செல்ல சக்கர நாற்காலி மற்றும் தன்னாா்வலா்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என உதவி தோ்தல் நடத்தும் அலுலா்களுக்கு அறிவுறுத்தினாா்.