பெரம்பலூா் நகரில் மாடியிலிருந்து தவறி விழுந்த கூலி தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
பெரம்பலூா் - எளம்பலூா் சாலையிலுள்ள ரோஸ் நகரில் வசித்து வந்தவா் சுப்பிரமணி மகன் சரவணகுமாா் (35). கூலித் தொழிலாளியான இவா், பெரம்பலூா் விவேகானந்தா் நகா் 3-ஆவது தெருவில் கடந்த 25 நாள்களாக வீட்டை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டின் முதல் தளத்தில் வேலை செய்துகொண்டிருந்த சரவணகுமாா், எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தாா்.
இதையறிந்த அப்பகுதியைச் சோ்ந்தவா்கள், சரவணகுமாரை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு, மருத்துவா்கள் மேற்கொண்ட பரிசோதனையில் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மாடியிலிருந்து தவறிவிழுந்த வட்டாட்சியா் உயிரிழப்பு

கால்வாயில் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


