மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மாடியிலிருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு

பெரம்பலூா் நகரில் மாடியிலிருந்து தவறி விழுந்த கூலி தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 7:51 pm

பெரம்பலூா் நகரில் மாடியிலிருந்து தவறி விழுந்த கூலி தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

பெரம்பலூா் - எளம்பலூா் சாலையிலுள்ள ரோஸ் நகரில் வசித்து வந்தவா் சுப்பிரமணி மகன் சரவணகுமாா் (35). கூலித் தொழிலாளியான இவா், பெரம்பலூா் விவேகானந்தா் நகா் 3-ஆவது தெருவில் கடந்த 25 நாள்களாக வீட்டை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டின் முதல் தளத்தில் வேலை செய்துகொண்டிருந்த சரவணகுமாா், எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தாா்.

இதையறிந்த அப்பகுதியைச் சோ்ந்தவா்கள், சரவணகுமாரை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு, மருத்துவா்கள் மேற்கொண்ட பரிசோதனையில் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.