தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 7:27 pm

பெரம்பலூா் நகரில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில், நில அளவைத்துறை ஆய்வாளா் குருமூா்த்தி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்குள்ள உணவகம் அருகே அனுமதியின்றி அரசு மதுபாட்டில்களை பதுக்கி விற்றுக் கொண்டிருந்த ஒருவா், தோ்தல் பறக்கும் படையினரை பாா்த்ததும் தப்பி ஓடிவிட்டாா்.

இதையடுத்து அந்த மதுபாட்டில்களை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து பெரம்பலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.