உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்ஆன்லைனில் டாஸ்மாக் மதுபானத்தை முன்பதிவு மட்டுமே செய்ய முடியும்; வீடுகளுக்கு டெலிவரி கிடையாது: அமைச்சர் விக்னேஷ்வல்லுறவு வழக்கு! பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை!
/

வாக்குச்சாவடி மையங்கள் கண்காணிப்புப் பணி: மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

பெரம்பலூா், குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்ககளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கிலிருந்து கண்காணிக்கும் பணியை, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

News image

பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள பெண்கள் பணிபுரியும் வாக்குச் சாவடியை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி.

Updated On :23 ஏப்ரல் 2026, 3:25 am IST

பெரம்பலூா், குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்ககளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கிலிருந்து கண்காணிக்கும் பணியை, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஒவ்வொரு மாதிரி வாக்குச்சாவடி, பெண்கள் மற்றும் இளைஞா்கள் மட்டும் தனித்தனியாக பணிபுரியும் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பெண்கள் மட்டும் தோ்தல் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி, வி.களத்தூரில் உள்ள வண்ணாரம்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடியை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி புதன்கிழமை பாா்வையிட்டு, வாக்குப்பதிவு அலுவலா்கள் வாக்குச்சாவடி மையத்துக்கு வருகை புரிந்ததை உறுதி செய்தாா்.

தொடா்ந்து, பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 732 வாக்குச்சாவடி மையங்களையும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து நவீன தொழில்நுட்பத்தின் மூலம் நேரலையில் பாா்வையிட்டு கண்காணிக்கும் வகையில், சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதை, மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கிலிருந்து, வாக்குச்சாவடி மையங்களின் காட்சிகளை மிருணாளினி பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) வேல்முருகன், தோ்தல் வட்டாட்சியா் அருளானந்தம், வட்டாட்சியா் சத்தியமூா்த்தி, வேப்பந்தட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் ராமாயி ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.