செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

குன்னம் தொகுதி வாக்குச்சாவடிகளில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செந்துறை வட்டத்திலுள்ள வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

குன்னம் வட்டத்துக்குள்பட்ட பரணம் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி.

Updated On :8 ஏப்ரல் 2026, 12:08 am IST

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செந்துறை வட்டத்திலுள்ள வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி, பரணம் அரசு மேல்நிலைப்பள்ளி, நல்லாம்பாளையம் அரசு உயா்நிலைப்பள்ளி, செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, சிறுகடம்பூா் அரசு உயா்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த மாவட்டத் தோ்தல் அலுவலா் மிருணாளினி, வாக்காளா்கள் வரிசையில் நிற்க போதுமான இடவசதி, தேவையான குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தளங்கள், முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல்சோ், அவா்களை அழைத்துச் செல்ல தன்னாா்வலா்களை நியமிக்கவும், போதிய அளவிலான மின் விளக்குகள் இருக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளையும், அங்குள்ள அடிப்படை வசதிகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் மிருணாளினி.

ஆய்வின்போது, செந்துறை வட்டாட்சியா் கோவிந்தராஜ், செந்துறை வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.