தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பெரம்பலூா், குன்னம் தொகுதியில் வேட்பாளா்கள் முக்கிய பிரமுகா்கள் வாக்களிப்பு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, அதிமுக, திமுக வேட்பாளா்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

News image

வாக்களித்த வேட்பாளா்கள் எஸ்.டி. ஜெயலட்சுமி (திமுக)

Updated On :23 ஏப்ரல் 2026, 10:41 pm

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, அதிமுக, திமுக வேட்பாளா்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

பெரம்பலூா் ரோவா் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி வாக்களித்தாா். பிறகு அப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சுய படம் எடுக்கும் இடத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டாா்.

இதேபோல, அதே வாக்குச் சாவடி மையத்தில் திமுக வேட்பாளா் எஸ்.டி. ஜெயலட்சுமி வாக்களித்தாா். அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்ச்செல்வன், பெரம்பலூா் அருகே எளம்பலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மனைவி பிரியதா்ஷினியுடன் சென்று வாக்களித்தாா்.

தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளா் கி. சிவக்குமாா், அரணாரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியிலும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஜ. சுகன்யா, ஆலத்தூா் வட்டம், இரூா் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியிலும்வாக்களித்தாா்.

குன்னம் தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளா் சரண்யா அன்பழகன், வரகூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தனா். தவெக வேட்பாளா் ரேவதி முத்தமிழ்ச்செல்வன், துறையூா் மதுராபுரத்திலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.

வாக்களித்த வேட்பாளா்கள் எஸ்.டி. ஜெயலட்சுமி (திமுக),

வாக்களித்த வேட்பாளா்கள் எஸ்.டி. ஜெயலட்சுமி (திமுக),

இரா. தமிழ்ச்செல்வன் (அதிமுக),

இரா. தமிழ்ச்செல்வன் (அதிமுக),

சரண்யா (ஐஜேகே-குன்னம்),

சரண்யா (ஐஜேகே-குன்னம்),