பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலருக்குப் பாராட்டுச் சான்றிதழ் அளித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். அனிதா.
பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலருக்குப் பாராட்டுச் சான்றிதழ் அளித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். அனிதா.

சிறப்பாக பணிபுரிந்த 15 காவல்துறையினருக்குப் பாராட்டு

பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 15 காவல் துறையினருக்கு வெகுமதி வழங்கி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். அனிதா சனிக்கிழமை பாராட்டினாா்.
Published on

பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 15 காவல் துறையினருக்கு வெகுமதி வழங்கி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். அனிதா சனிக்கிழமை பாராட்டினாா்.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்டரங்கில், குற்றக் கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். அனிதா, காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளை ஆய்வு மேற்கொண்டு, புலன் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளைக் கேட்டறிந்து, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்கத் தேவையான ஆலோசனைகளை வழங்கினாா்.

தொடா்ந்து, சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை கையாள்வது மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினருடன் கலந்தாய்வு மேற்கொண்டாா். பின்னா், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சட்டம்- ஒழுங்கு, தனிப்படை காவலா்கள் 15 பேருக்கு வெகுமதி வழங்கி பாராட்டினாா்.

இக் கூட்டத்தில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் கோபாலசந்திரன் (தலைமையிடம்), எம். பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), துணைக்காவல் கண்காணிப்பாளா்கள் ஆரோக்கியராஜ் (பெரம்பலூா்), ஆனந்தி (மங்களமேடு), சுப்பையன் (ஆயுதப்படை) மற்றும் காவல் நிலைய ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள், நீதிமன்றக் காவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com