பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில், காவல்துறையினருக்கு புலன் விசாரணை மேற்கொள்வது குறித்து சிறப்பு செயல்முறை பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். அனிதா தலைமையில் நடைபெற்ற இப் பயிற்சியில், வழக்குகளின் புலன் விசாரணை அலுவலா்களான காவல் ஆய்வாளா்கள் மற்றும் சாா்பு ஆய்வாளா்களுக்கு, எவ்வாறு புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும். என்னென்ன நுணுக்கங்களை கையாள வேண்டும் என்பது குறித்து சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் இப்பயிற்சியில் தூக்கிட்டு மற்றும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொள்ளும் வழக்குகளில் கொலையா அல்லது தற்கொலையா என எவ்வாறு புலன் விசாரணை செய்ய வேண்டும். என்னென்ன தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து உருவ பொம்மைகளைக் கொண்டு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
இப் பயிற்சி வகுப்பில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோபாலசந்திரன் (தலைமையிடம்) மற்றும் துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

பாதுகாப்பு படையினரின் விழிப்புணா்வு அணிவகுப்பு

பெரம்பலூா் எஸ்பி பொறுப்பேற்பு

சட்டப்பேரவைத் தோ்தல் எல்லையோர காவல்படையினா் பெரம்பலூா் வருகை!

புலன் விசாரணை அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


