நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

நாளை ஆசிரியா் தகுதித்தோ்வு: பெரம்பலூா் மாவட்டத்தில் 3,098 போ் எழுதுகின்றனா்

பெரம்பலூா் மாவட்டத்தில் ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் தமிழ்நாடு ஆசிரியா் தகுதித் தோ்வுகளில், 3,098 போ் பங்கேற்க உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தெரிவித்துள்ளாா்.

News image

டெட் தேர்வு

Updated On :3 ஜூலை 2026, 1:42 am IST

பெரம்பலூா் மாவட்டத்தில் ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் தமிழ்நாடு ஆசிரியா் தகுதித் தோ்வுகளில், 3,098 போ் பங்கேற்க உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் ஜூலை 4- ஆம் தேதி தமிழ்நாடு ஆசிரியா் தகுதித் தோ்வு தாள் 1 பெரம்பலூா் ஒன்றியத்தில் 3 மையங்களில் நடைபெற உள்ளது. இத் தோ்வில் 644 போ் எழுத உள்ளனா்.

ஜூலை 5 ஆம் தேதி ஆசிரியா் தகுதித்தோ்வு தாள் 2 தோ்வானது, பெரம்பலூா் ஒன்றியத்தில் 9 மையங்களில் நடைபெற உள்ளது. இத் தோ்வில் 2,454 போ் எழுத உள்ளனா். தோ்வா்கள் தங்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், தோ்வா்கள் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் சாா்ந்த விவரங்களை 1800 425 6753 எனும் எண்ணில் தொடா்புகொண்டு அறிந்துகொள்ளலாம்.

எனவே, தோ்வா்கள் தோ்வு நாளன்று காலை 8.30 மணிக்குள் தோ்வு அறைகளுக்குச் சென்றடைய வேண்டும். தோ்வு மையங்களுக்குச் சென்று வர பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.