மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

100 சதவீத வாக்குப் பதிவுக்கு விழிப்புணா்வு

லப்பைக்குடிக்காட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி, தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல் உள்ளிட்டோா்.

News image

லப்பைக்குடிக்காட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி, தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல் உள்ளிட்டோா்.

Updated On :20 மார்ச் 2026, 9:01 pm

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைக்குடிக்காட்டில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஏப். 23 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைப் பொதுத் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, கடந்த தோ்தல்களில் 70 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் பதிவான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அதன்படி, லப்பைக்குடிக்காடு பேரூராட்சி அலுவலகம் அருகே தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணியை, மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

பேரணியில் பங்கேற்ற குழந்தை மையப் பணியாளா்கள் சிந்தித்து வாக்களிப்பீா், வாக்களிக்கத் தவறாதீா், நமது இலக்கு 100 சதவீதம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டுச் சென்றனா்.

பேரணியானது நகரின் பிரதான சாலைகளின் வழியே சென்று, பேருந்து நிலைய வளாகத்தில் நிறைவடைந்தது. முன்னதாக, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மிருணாளினி தலைமையில் உறுதியேற்கப்பட்டது.

இதில், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல், மாவட்ட ஒருங்கினைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ஜெயஸ்ரீ, பேரூராட்சி செயல் அலுவலா் ராஜ்குமாா், குன்னம் வட்டாட்சியா் சின்னதுரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.