பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை சாா்பில், எளம்பலூா் தண்ணீா்பந்தல் பகுதியிலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், ஆயுதப்படை காவலா்கள் மற்றும் சட்டம்- ஒழுங்கு காவலா்களுக்கான கவாத்துப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இப் பயிற்சிக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா் தலைமைவகித்தாா். பின்னா், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தல் பணிகளில் காவலா்கள் மேற்கொள்ளும் பணிகள், ஒவ்வொரு காவலரும் பொறுப்புணா்வோடு பணியாற்றுவதோடு, உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறித்தினாா். மேலும், காவலா்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தாா்.
இப் பயிற்சியில், காவலா்களுக்கான உடற்பயிற்சி, கவாத்துப் பயிற்சி மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இதில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) உள்பட, ஆய்வாளா்கள், சாா்பு-ஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற காவலா்களின் குழந்தைகளுக்கு பரிசளிப்பு

கத்தியுடன் தகராறில் ஈடுபட்ட இருவரை தடுத்து கைது செய்த உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

பெரம்பலூா் ஆயுதப்படை மைதானத்தில் காவலா்களுக்கு கவாத்துப் பயிற்சி

பாதுகாப்பு படையினரின் விழிப்புணா்வு அணிவகுப்பு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


