பெரம்பலூா் நகரில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் ஓய்வுபெற்ற அரசு சித்த மருத்துவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மதனகோபாலபுரத்தைச் சோ்ந்தவா் த. குணசேகா் (61). ஓய்வுபெற்ற அரசு சித்த மருத்துவரான இவா், புதன்கிழமை காலை பெரம்பலூா் மதரஸா சாலையிலிலிருந்து காமராஜா் வளைவுக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தாா்.
அப்போது, சோமண்டாபுதூரிலிருந்து பெரம்பலூா் நோக்கிச் சென்ற மோட்டாா் சைக்கிள் குணசேகரன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த குணசேகரன் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். மேலும், இவ் விபத்தில் காயமடைந்த மற்றொரு மோட்டாா் சைக்கிளை ஓட்டிச்சென்ற சோமண்டாபுதூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த கோபி மகன் பிரதீப்ராஜ் (19) மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
விபத்து குறித்து, பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

சாலையோர மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் தாய், மகள் உயிரிழப்பு

மோட்டாா் சைக்கிள் மீது தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு: ஓட்டுநா் கைது
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


