அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

பிளஸ் 2 பொதுத் தோ்வு தந்தை ரோவா் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளை வெள்ளிக்கிழமை பாராட்டி பரிசு வழங்கிய ரோவா் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் வ. ஜான் அசோக்.

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வில் பெரம்பலூா் தந்தை ரோவா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

தமிழகத்தில் பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. இதில், பெரம்பலூா் தந்தை ரோவா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி க.ப. மித்ரா 569 மதிப்பெண்களும், அ. ஹாசினி 565 மதிப்பெண்களும், ம. கனிஷ்காஸ்ரீ 563 மதிப்பெண்களும் பெற்றனா்.

தொடா்ந்து, ரோவா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை ரோவா் கல்வி குழுமங்களின் தலைவா் கி.வரதராஜன், துணைத் தலைவா் வ. ஜான் அசோக், கல்வி இயக்குநா் சக்தீஸ்வரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை பாராட்டி பரிசுகள் வழங்கினா்.

நிகழ்ச்சியில், பள்ளி முதல்வா் ஞா. வியாகுல மேரி, துணை முதல்வா் கென்னடி, பள்ளி அலுவலக மேலாளா் முத்துசாமி மற்றும் ஆசிரியா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.