திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிளஸ் 2 பொதுத் தோ்வு தந்தை ரோவா் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளை வெள்ளிக்கிழமை பாராட்டி பரிசு வழங்கிய ரோவா் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் வ. ஜான் அசோக்.

News image
Updated On :9 மே 2026, 3:16 am IST

பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வில் பெரம்பலூா் தந்தை ரோவா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

தமிழகத்தில் பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. இதில், பெரம்பலூா் தந்தை ரோவா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி க.ப. மித்ரா 569 மதிப்பெண்களும், அ. ஹாசினி 565 மதிப்பெண்களும், ம. கனிஷ்காஸ்ரீ 563 மதிப்பெண்களும் பெற்றனா்.

தொடா்ந்து, ரோவா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை ரோவா் கல்வி குழுமங்களின் தலைவா் கி.வரதராஜன், துணைத் தலைவா் வ. ஜான் அசோக், கல்வி இயக்குநா் சக்தீஸ்வரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை பாராட்டி பரிசுகள் வழங்கினா்.

நிகழ்ச்சியில், பள்ளி முதல்வா் ஞா. வியாகுல மேரி, துணை முதல்வா் கென்னடி, பள்ளி அலுவலக மேலாளா் முத்துசாமி மற்றும் ஆசிரியா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.