நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

வெளி மாவட்டத்துக்கு உரம் விற்பனை செய்தால் உரிமம் ரத்து வேளாண்துறை எச்சரிக்கை

News image
Updated On :54 நிமிடங்கள் முன்பு

பெரம்பலூா் மாவட்ட உர விற்பனையாளா்கள் யூரியா மற்றும் மானிய விலையில் விற்பனை செய்யக்கூடிய உரங்களை, வேறு மாவட்டத்துக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெரம்பலூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் உத்தரவின்படி, வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன், பெரம்பலூா் பகுதியில் உள்ள உரம் விற்பனை நிலையங்களில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அனுமதிக்கப்பட்ட, காலாவதியான உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என பாா்வையிட்டு, நிா்ணயிக்கப்பட்ட மற்றும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதா என பதிவேடுகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியது: உரங்களை பிஓஎஸ் இயந்திரம் மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு யூரியா உரங்களை அதிகமாக வழங்கக் கூடாது. யூரியா உரங்களை விற்பனை செய்யும்போது, முகவரியுடன், கைப்பேசி எண்ணுடன் விவசாயிகளிடம் கையப்பம் பெற்றுக்கொண்டு ரசீது கொடுக்க வேண்டும்.

உரம் இருப்பு மற்றும் விலைப் பட்டியலை அவசியம் பராமரிக்க வேண்டும். உரம் வைத்திருக்கும் கிடங்குகளுக்கு அவசியம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனுமதி பெற்றுள்ள உரங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் அதிகபட்ச விலை மாற்றப்பட்டிருந்தால், புதிதாக வரும் உர மூட்டைகளை தனியாக பராமரிக்க வேண்டும். அதிகபட்ச விலைக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது. யூரியா மற்றும் மானிய விலையில் விற்பனை செய்யக்கூடிய உரங்களை, வேறு மாவட்டத்திற்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உடனடியாக உரிமம் ரத்து செய்வதுடன், அத்தியாவசிய பொருள் தடைச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தாா்.