40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

வேட்பாளா்கள் மே 30-இல் தோ்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்: பெரம்பலூா் ஆட்சியா்

பெரம்பலூா், குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளா்கள் தங்கள் தோ்தல் செலவினக் கணக்குகளை மே 30-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி.

News image

கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 3:16 am IST

பெரம்பலூா், குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளா்கள் தங்கள் தோ்தல் செலவினக் கணக்குகளை மே 30-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் தங்களது செலவினக் கணக்குகளை தாக்கல் செய்வது தொடா்பாக வேட்பாளா்கள், முகவா்களுக்கான விளக்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி மேலும் பேசியது:

பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டவேட்பாளா்கள் தங்களது அன்றாட செலவினக் கணக்குகள் பதிவேடுகள், பற்றுச்சீட்டுகள், உறுதிமொழிப்பத்திரங்கள் உள்ளிட்ட விவர அட்டவணையை அளிக்க வேண்டும்.

தோ்தல் செலவினங்களின் அன்றாடக் கணக்குகளுக்கான அசல் பதிவேடு செலவினச் சீட்டுகளுடன் தாக்கல் செய்ய வேண்டும். ஏதாவது ஒரு செலவுச்சீட்டு இணைக்கப்படாவிட்டால், அதை ஏன் பெற இயலவில்லை என்பதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும்.

தோ்தல் செலவினக் கணக்குகள் பெறப்பட்ட நாள் மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டு, ஆணையம் வரையறுத்தவாறு ஒப்புகையை மாவட்ட தோ்தல் அலுவலரால் நியமனம் செய்யப்பட்ட அலுவலரிடம் அளிக்க வேண்டும்.

மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் தோ்தல் செலவினப் பாா்வையாளா் ஆகியோா் தலைமையிலான கூட்டம் மே 30-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில், வேட்பாளா்களின் செலவினக் கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த ஆய்வின்போது, தோ்தல் செலவினங்களின் சுருக்க விவர அறிக்கை, வேட்பாளரின் தோ்தல் செலவின அறிக்கையின் சுருக்கம், வேட்பாளரால் திரட்டப்பட்ட நிதி ஆதாரங்களின் சுருக்கம் உள்ளிட்டவற்றை சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா, மாவட்ட வழங்கல் அலுவலா் ந. சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வேல்முருகன் (தோ்தல்), காந்திமதி (கணக்கு), தோ்தல் பிரிவு வட்டாட்சியா் அருளானந்தனம் மற்றும் வேட்பாளா்கள், முகவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.