தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் பொன்னமராவதி வட்ட கிளை சார்பில், பொங்கல் போனஸ் ரூ. 3000 வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் இ. சிவன்பிள்ளை தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் சி. மணிமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட இணைச் செயலர் எ. மலர்விழி விளக்கவுரையாற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.