தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வருவாய் ஆய்வாளர்கள் மீது தாக்குதல்: நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே வருவாய் ஆய்வாளர் இருவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி

News image
Updated On :5 ஜனவரி 2013, 4:44 am

தினமணி

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே வருவாய் ஆய்வாளர் இருவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வருவாய்த் துறை ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 மணமேல்குடி ஒன்றியம், இடையாத்திமங்களம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டுக்கு ஊராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்வதில்லை என மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தாராம்.
 இதுகுறித்து விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டதை அடுத்து, கோட்டைப்பட்டினம் வருவாய் ஆய்வாளர் புவிராஜ், மணமேல்குடி வருவாய் ஆய்வாளர் ராஜா ஆகியோர் வெüóளிக்கிழமை இடையாத்திமங்களம் கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
 அப்போது அங்கு சென்ற ஊராட்சித் தலைவர் பாண்டியராமன் உள்ளிட்ட சிலர் வரு
 வாய் ஆய்வாளர்களைத் தாக்கினராம்.
 இதை கண்டித்தும், ஊராட்சித் தலைவர் உள்ளிட்டோரை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலர் எஸ். ஜானகிராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி. ஜெயபாலன், செயலர் சி. கோவிந்தசாமி உள்ளிட்டோர் பேசினர்.
 இதேபோல அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி வட்டத் தலைமையிடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.