திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

"அரசின் நற்பெயருக்கு கிராம ஊராட்சிகள்தான் முன்னோடி'

அரசுக்கு நல்ல பெயர் கிடைக்க கிராம ஊராட்சிகள் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்றார் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ந. சுப்பிரமணியன்.

Updated On :12 மே 2013, 6:13 am IST

அரசுக்கு நல்ல பெயர் கிடைக்க கிராம ஊராட்சிகள் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்றார் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ந. சுப்பிரமணியன்.

புதுக்கோட்டையில் வனத் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற வனத் துறை மூலம் ஏலம் விடப்பட்ட சமூகக் காடுகள் மூலம் கிடைத்த வருவாயில் 75 சதப் பங்குத்தொகை ரூ. 38.44 லட்சத்தை 52 ஊராட்சிகளுக்கு வழங்கும் விழாவில் அவர் பேசியது:

தமிழகத்தில் 1960 முதல் கிராமக் கண்மாய்களிலும், ஒதுக்குக் காடுகளுக்கு வெளியில் உள்ள தரிசு நிலங்களில் பண்ணைக் காடுகள் திட்டம் உருவாக்கப்பட்டது.

இதையடுத்து 1981 -ல் சுவீடன் உதவியுடன் (சிடா) 1981 முதல் 1986 வரை 5 ஆண்டுகளுக்கு முதல்கட்டமாக சமூகக் காடுகள் திட்டம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் தமிழகத்தில் 1.40 லட்சம் எக்டேரில் காடுகள் உருவாக்கப்பட்டன. இதையடுத்து 2-ம் கட்டமாக 1988 முதல் 1994 வரை செயல்படுத்தப்பட்டது. அதில் வனத்துறை, வேளாண் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகள் பங்கேற்றன. இதன் மூலம் இடைபடு காடுகள் திட்டம் உருவாகி, அதுவே தற்போது வனக்கூட்டு மேலாண்மைத்திட்டத்துக்கு முன்னோடியாக திகழ்கிறது.

சமூக வனத்தோட்டங்களை ஏலம் விடப்பட்டதன் மூலம் 75 சத  பங்குத் தொகையாக 2009-10 -ல் ரூ.22 லட்சத்து 86 ஆயிரத்து 374-ம், 2010-11 -ம் ஆண்டில் ரூ. 15 லட்சத்து 58 ஆயிரத்து 30 ஆக மொத்தம் ரூ.38 லட்சத்து 44 ஆயிரத்து 404 மதிப்பில் பங்குத்தொகை வருவாய் கிடைத்துள்ளது.

இதனை 52 ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக வங்கி வரைவோலைகளாக தற்போது வழங்கப்பட்டுள்ளது.

இதை கிராம ஊராட்சித் தலைவர்கள் கிராமங்களின் அடிப்படை வசதிக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்  திட்டங்களைச் செயல்படுத்தி நல்ல பெயரை எடுக்க ஊராட்சித் தலைவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் முன்வர வேண்டும். பசுமை வீடுகள் ஒதுக்கீடு தொடர்பான புகார்கள்தான் அதிகமான எங்களிடம் வருகின்றன. எனவே அதில் தவறுகள் நடப்பதற்கு நீங்கள் காரணமாகிவிட வேண்டாம் என்றார்.

இதில் எம்எல்ஏ வி.ஆர். கார்த்திக்தொண்டைமான்,  வருவாய் அலுவலர் க. நாகராசன்,   ஊராட்சித் தலைவர் வி.சி. ராமையா, வருவாய்க் கோட்டாட்சியர் சி. முத்துமாரி, நகர்மன்றத் தலைவர் (பொ)எஸ். அப்துல்ரகுமான், ஒன்றியக் குழுத் தலைவர்கள் உமாதேவி கருப்பையா, (புதுக்கோட்டை), சுப்பையா (விராலிமலை), கெங்கையம்மாள் சொக்கலிங்கம் (கறம்பக்குடி), ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் ஜெயலெட்சுமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கே.வி. துரைராஜ்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.