எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பொன்னமராவதியில்  பாரம்பரிய விளையாட்டுப் போட்டி

பொன்னமராவதி அருகே உள்ள வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா பாரம்பரிய விளையாட்டு விழாவாகக் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 12:58 am

DIN

பொன்னமராவதி அருகே உள்ள வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா பாரம்பரிய விளையாட்டு விழாவாகக் கொண்டாடப்பட்டது.
பல்லாங்குழி, தாயம், நொண்டியடித்தல், சொட்டாங்கல், நாடுபிடித்தல், பானை உடைத்தல், பச்சைக்குதிரை, கபடி, கயிறு இழுத்தல், பம்பரம் சுற்றுதல் போன்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை இப்பள்ளி மாணவர்கள் விளையாடினர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பள்ளி முதல்வர் வே. முருகேசன், தனி அலுவலர் நெ.ராமச்சந்திரன், துணை முதல்வர்கள் வைதேகி, கலைமதி உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதேபோல் திருக்களம்பூர் ஊராட்சி அண்ணாநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு மாறுவேடப் போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. தலைமையாசிரியர் வெ.கவிதா, ஆசிரியர் ராஜூ உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.