மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

கட்டண உயர்வைக் கண்டித்து கேபிள் ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான ""டிராய்'' நடவடிக்கையால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள

Updated On :25 டிசம்பர் 2018, 9:38 am IST

மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான ""டிராய்'' நடவடிக்கையால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கேபிள் டிவி கட்டண உயர்வைக் கண்டித்து புதுக்கோட்டையில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு கேபிள் ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொருளாளர் வெள்ளைச்சாமி, புதுக்கோட்டை  தலைவர் பி. வரதராஜன், செயலர் கே.கண்ணன், பொருளாளர் பிரேமானந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். மத்திய அரசின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்தக் கோரியும் மக்கள் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டியை 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.