தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ரயில் மோதி இளைஞர் சாவு

புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட் அருகே ரயில் மோதி உயிரிழந்த இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை  மேற்கொண்டுள்ளனர்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:07 am

DIN

புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட் அருகே ரயில் மோதி உயிரிழந்த இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை  மேற்கொண்டுள்ளனர். புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை ரயில் மோதி இளைஞர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்து சென்ற திருக்கோகர்ணம் போலீஸார் இதுகுறித்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த திருச்சி ரயில்வே போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர் புதுக்கோட்டை காமராஜபுரத்தைச் சேர்ந்த முத்து (34) கூலித்தொழிலாளி என்பது தெரியவந்தது. சடலத்தை மீட்டு புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முத்து தற்கொலை செய்து
கொண்டாரா என்ற கோணத்திலும் ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.