ஆலங்குடி அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் இரு இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு காரணமான ஓட்டுர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 4 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அணவயல் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரகாஷ்(19), துலுக்கவிடுதி கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து மகன் பாலமுருகன்(24). இவர்கள் இருவரும் வடகாட்டுக்கு சென்றுவிட்டு இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மாங்காடு பூச்சிகடை பகுதியில் சென்ற போது, எதிரே வந்த கார், இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரகாஷ், பாலமுருகன் இருவரும் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர். காரில் வந்த தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே புனல்வாசலைச் சேர்ந்த இருவர் தப்பியோடி விட்டனர்.
இதையடுத்து, அங்கு திரண்ட இருவரது உறவினர்கள், கிராம மக்கள், கார் ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி இருவரது சடலங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற ஆலங்குடி வட்டாட்சியர் ரத்னாவதி, காவல் துணைக் கண்காணிப்பாளர் அப்துல் முத்தலிப் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மறியல் போராட்டம் காரணமாக ஆலங்குடி- பட்டுக்கோட்டை, பேராவூரணி சாலையில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பங்குச்சந்தைகள் வர்த்தகம் உயர்வுடன் தொடக்கம்

முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை

தந்தையர் நாள்! என்னென்ன பரிசுகள் கொடுக்கலாம்?

மகாராஷ்டிரத்தில் கிணற்றுக்குள் வாகனம் விழுந்ததில் 8 பேர் பலி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


