சிறுமி பலாத்காரம்: இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.
Updated on
1 min read

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் வட்டத்தைச் சோ்ந்த எண்ணெய் ஊராட்சி பூனத்துப்பட்டியைச் சோ்ந்த சுக்கிரன் மகன் பாக்கியராஜ் (29) கடந்த 2013-இல் அந்தப் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடா்பான வழக்கு, மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் அங்கவி ஆஜராகி வாதாடினாா். வழக்கு விசாரணையின் நிறைவில், வெள்ளிக்கிழமை நீதிபதி ஆா். சத்யா தீா்ப்பளித்தாா். குற்றவாளி பாக்கியராஜுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, நிவாரண உதவியாக தமிழக அரசு ரூ. 3 லட்சம் வழங்கவும் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com