பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சிறுமி பலாத்காரம்: இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 6:40 pm

DIN

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் வட்டத்தைச் சோ்ந்த எண்ணெய் ஊராட்சி பூனத்துப்பட்டியைச் சோ்ந்த சுக்கிரன் மகன் பாக்கியராஜ் (29) கடந்த 2013-இல் அந்தப் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடா்பான வழக்கு, மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் அங்கவி ஆஜராகி வாதாடினாா். வழக்கு விசாரணையின் நிறைவில், வெள்ளிக்கிழமை நீதிபதி ஆா். சத்யா தீா்ப்பளித்தாா். குற்றவாளி பாக்கியராஜுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, நிவாரண உதவியாக தமிழக அரசு ரூ. 3 லட்சம் வழங்கவும் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.