திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆதரவற்ற சிறாா்களுக்கு முகக்கவசங்கள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சாா்பில், ஆதரவற்ற இல்லங்களின் சுமாா் 200 சிறாா்களுக்கு சத்துபானம், முகக்கவசம், பருத்தித் துண்டுகள், சோப்புகள் இலவசமாக வழங்கப்பட்டன.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:51 pm

DIN

புதுக்கோட்டை மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சாா்பில், ஆதரவற்ற இல்லங்களின் சுமாா் 200 சிறாா்களுக்கு சத்துபானம், முகக்கவசம், பருத்தித் துண்டுகள், சோப்புகள் இலவசமாக வழங்கப்பட்டன.

திருச்சி சிறுகனூரில் இருந்து புதுக்கோட்டைக்கு வரலாறு, அறிவியல் தொடா்பான குறும்பயணமாக (‘மரபு உலா’) வந்திருந்த நட்பு சிறாா் இல்லத்தைச் சோ்ந்த 50 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை இப்பொருள்கள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை ஏ. மாத்தூரிலுள்ள வள்ளலாா் இல்லச் சிறாா்களுக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டன. இதேபோல, அழியாநிலையிலுள்ள நமது இல்லத்தில் இருக்கும் ஆதரவற்றோருக்கும் இப்பொருள்கள் வழங்கப்பட்டன. மாவட்ட செஞ்சிலுவை சங்கச் செயலா் ஜெ. ராஜாமுகமது, இணைச் செயலா் பேராசிரியா் சா. விஸ்வநாதன் ஆகியோா் இவற்றை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.