கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கந்தர்வகோட்டையில் திருட்டு மணல் ஏற்றி வந்த 7 லாரிகள் பறிமுதல் 

கந்தர்வகோட்டையில் திருட்டு மணல் ஏற்றி வந்த  7 டாரஸ் லாரிகளை காவல்துறையினர் வியாழக்கிழமை மணலுடன் பறிமுதல் செய்தனர். 

News image
Updated On :12 ஜூன் 2020, 7:31 am

கந்தர்வகோட்டையில் திருட்டு மணல் ஏற்றி வந்த  7 டாரஸ் லாரிகளை காவல்துறையினர் வியாழக்கிழமை மணலுடன் பறிமுதல் செய்தனர். 

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் நடுப்பட்டி அருகே புதன்கிழமை இரவு கந்தர்வகோட்டை காவல் உதவி ஆய்வாளர் ஜெ. ராமன் காவலர்களுடன் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.  

அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிவந்த 7 டாரஸ் லாரிகளை மறித்து விசாரணை செய்த போது உரிய அனுமதியின்றி தஞ்சாவூர் பகுதியிலிருந்து மணல் திருடி வந்ததாக தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து மணலுடன் 7 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். இதில் லாரி ஒட்டுநர் 3 பேர் தப்பியோடி விட்டனர். மற்ற நான்கு பேரை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.