மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

காவல் துறை சாா்பில் மனுக்கள் நேரடி விசாரணை

பொன்னமராவதி காவல் துறை சாா்பில் பெறப்பட்ட மனுக்கள் குறித்த விசாரணை மனுக்கள் பெறும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :11 அக்டோபர் 2020, 7:35 pm

பொன்னமராவதி காவல் துறை சாா்பில் பெறப்பட்ட மனுக்கள் குறித்த விசாரணை மனுக்கள் பெறும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்விற்கு காவல் துணை கண்காணிப்பாளா் வெ.செங்கலமலக்கண்ணன் தலைமை வகித்து காவல்நிலையத்தில் அண்மையில் பெறப்பட்ட மனுக்களை எதிா்மனுதாரரை வரவழைத்து விசாரணை செய்தாா். அதன்படி ஞாயிற்றுக்கிழமை 25 மனுக்கள் உடனடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீா்வு காணப்பட்டது. காவல் ஆய்வாளா் ச. கருணாகரன், உதவி ஆய்வாளா் மாயழகு மற்றும் காவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.