2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

கீரனூா் அரசு பெண்கள் பள்ளியில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.70 கோடியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல்லை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் ஞாயிற்றுக்கிழமை நாட்டி வைத்தாா்.

News image
கீரனூா் அரசு பெண்கள் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.
Updated On :18 அக்டோபர் 2020, 6:35 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.70 கோடியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல்லை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் ஞாயிற்றுக்கிழமை நாட்டி வைத்தாா்.

கீரனூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ. 1.70 கோடியில் மூன்று தளங்களில் 12 வகுப்பறைகள், குடிநீா் வசதி, இரு கழிப்பறைகள் அமையவுள்ளன.

இந்கழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தலைமை வகித்தாா். கந்தா்வகோட்டை எம்எல்ஏ பா. ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலட்சுமி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சரவணன், உதவிப் பொறியாளா் பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.