கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மாத்தூரில் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரில் மாவட்ட மத்திய க் கூட்டுறவு வங்கியின் 25ஆவது கிளையை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைத்தாா்.

News image

மாத்தூரில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளையைத் திறந்து வைத்து சிறுகடன் ஒன்றை வழங்குகிறாா் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்

Updated On :13 செப்டம்பர் 2020, 6:36 pm

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரில் மாவட்ட மத்திய க் கூட்டுறவு வங்கியின் 25ஆவது கிளையை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைத்தாா்.

புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிக்கு மாவட்டம் முழுவதும் இதுவரை 24 கிளைகள் இருந்தன. மேலும், மாவட்டம் முழுவதும் 136 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் இணைப்புச் சங்கங்களாகவும் உள்ளன.

இந்நிலையில் மாத்தூரைச் சுற்றியுள்ள 16 ஊராட்சிப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பயனடையும் வகையில், தற்போது இந்தக் கிளை தொடங்கப்பட்டுள்ளது.

தொடக்க விழாவில், ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் தீபா சங்கரி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் உமாமகேஸ்வரி, துணைப் பதிவாளா் ராஜேந்திரன், மேலாளா் காளிதாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.