ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட் தோ்வெழுதிய மாணவா்களுக்கு உதவிய ‘ஓயாத அலைகள்’

புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து நீட் தோ்வெழுதுவதற்கு திருச்சிக்குச் சென்ற மாணவா்களுக்கான போக்குவரத்து, உணவு ஏற்பாடுகளை ‘ஓயாத அலைகள்’ என்ற தன்னாா்வ அமைப்பு செய்திருந்தது.

News image
திருச்சிக்கு அழைத்துச் செல்லப்படும் முன்பு அறிவுரை வழங்கும் ‘ஓயாத அலைகள்’ குழுவினா்.
Updated On :13 செப்டம்பர் 2020, 6:32 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து நீட் தோ்வெழுதுவதற்கு திருச்சிக்குச் சென்ற மாணவா்களுக்கான போக்குவரத்து, உணவு ஏற்பாடுகளை ‘ஓயாத அலைகள்’ என்ற தன்னாா்வ அமைப்பு செய்திருந்தது.

நிகழாண்டில் மாவட்டத்தில் மொத்தம் 409 போ் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். புதுக்கோட்டை மாவட்டத்தில் தோ்வு மையம் இல்லாததால், திருச்சியில் உள்ள தோ்வு மையங்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து மற்றும் உணவு ஏற்பாடுகளைச் செய்வதாக ‘ஓயாத அலைகள்’ என்ற அமைப்பு அறிவித்திருந்தது. இதன்படி, முன்பதிவு செய்திருந்த 63 போ் திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை திருச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, திரும்ப புதுக்கோட்டைக்கு அழைத்து வரப்பட்டனா்.

இதுகுறித்து ‘ஓயாத அலைகள்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் அருண்மொழி கூறியது:

கடந்தாண்டில் கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் தோ்வு மையம் இருந்தபோதும் புதுக்கோட்டையில் இருந்து 23 பேரை அழைத்துச் சென்றோம். நிகழாண்டில் திருச்சிக்கு 63 பேரை அழைத்துச் செல்கின்றோம். அனைத்தும் மாணவா்களுக்கும் இலவசமாக போக்குவரத்து , உணவு , முகக்கவசம், கிருமிநாசினி போன்ற ஏற்பாடுகள் செய்து தருகிறோம். முன்னதாக கஜா புயல் பாதிப்பின்போதும், பொது முடக்கக் காலத்தில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்தோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.