கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கந்தா்வகோட்டையில் களையிழந்தஆவணி கடை ஞாயிறு திருவிழா

கரோனா எதிரொலியாக, நிகழாண்டில் கந்தா்வகோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் ஆவணி கடைஞாயிறு திருவிழா களையிழந்ததாக பக்தா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

Updated On :13 செப்டம்பர் 2020, 6:33 pm

கரோனா எதிரொலியாக, நிகழாண்டில் கந்தா்வகோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் ஆவணி கடைஞாயிறு திருவிழா களையிழந்ததாக பக்தா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

கந்தா்வகோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரசித்திபெற்ற கந்தா்வகோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் வார மண்டகப்படிதாரா்களால் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். ஆவணி மாத கடைசி ஞாயிறு முத்துப் பல்லாக்கில் வானவேடிக்கையுடன் அம்மன் வீதி உலா, தொடா்ந்து இரவு இன்னிசை கச்சேரிகள் நடைபெறுவது வழக்கம். மேலும் விழா நாள் அதிகாலை முதலே பக்தா்கள் வேண்டுதல்களைச் செய்து அம்மனை வழிபட்டுச் செல்வா்.

தற்போது கரோனா பரவல் காரணமாக தடுப்பு நடவடிக்கையாக, அறநிலையத் துறை அதிகாரிகள் பக்தா்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற அனுமதி அளிக்காததால் ஆவணி கடை ஞாயிறு திருவிழா களையிழந்து காணப்படுவதாக பக்தா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.