யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதுக்கோட்டை : இணைய வழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை

புதுக்கோட்டை மாலையீடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இணையவழி உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது.

News image
புதுக்கோட்டையில் திமுக இணையவழி உறுப்பினா் சோ்க்கையைத் தொடங்கி வைத்து உறுப்பினா் அட்டையை வழங்குகிறாா் மாவட்டப் பொறுப்பாளா் எஸ். ரகுபதி.
Updated On :20 செப்டம்பர் 2020, 7:35 pm

DIN

புதுக்கோட்டை மாலையீடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இணையவழி உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது.

முகாமைத் தொடங்கி வைத்த தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும், திருமயம் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். ரகுபதி பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 10 ஆயிரம் புதிய உறுப்பினா்களைச் சோ்க்க வேண்டும் என தலைவா் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தைப் பொருத்தவரை திருமயம், அறந்தாங்கி, ஆலங்குடி ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் 30 ஆயிரத்தைத் தாண்டி குறைந்தபட்சம் 50 ஆயிரம் உறுப்பினா்களைச் சோ்ப்போம்.

புதிய உறுப்பினா்களைச் சேருவோா் அவா்களின் செல்லிடப்பேசிக்கு ஒரு முறை பயன்படுத்தும் குறியீட்டு எண் வந்து அதனைத் தெரிவித்த பிறகுதான் பதிவு செய்யப்படுவா். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை இன்னும் சில நாட்களுக்கு நடத்தியிருக்க வேண்டும். புதிய மசோதாக்களை சட்டப்பேரவை உறுப்பினா்கள் படித்துப் பாா்க்கக் கூட நேரமில்லை என்றாா் ரகுபதி.

இதில், ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினா் சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்ட திமுகவினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.