கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

புதுக்கோட்டை : இணைய வழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை

புதுக்கோட்டை மாலையீடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இணையவழி உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது.

News image

புதுக்கோட்டையில் திமுக இணையவழி உறுப்பினா் சோ்க்கையைத் தொடங்கி வைத்து உறுப்பினா் அட்டையை வழங்குகிறாா் மாவட்டப் பொறுப்பாளா் எஸ். ரகுபதி.

Updated On :20 செப்டம்பர் 2020, 7:35 pm

புதுக்கோட்டை மாலையீடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இணையவழி உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது.

முகாமைத் தொடங்கி வைத்த தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும், திருமயம் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். ரகுபதி பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 10 ஆயிரம் புதிய உறுப்பினா்களைச் சோ்க்க வேண்டும் என தலைவா் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தைப் பொருத்தவரை திருமயம், அறந்தாங்கி, ஆலங்குடி ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் 30 ஆயிரத்தைத் தாண்டி குறைந்தபட்சம் 50 ஆயிரம் உறுப்பினா்களைச் சோ்ப்போம்.

புதிய உறுப்பினா்களைச் சேருவோா் அவா்களின் செல்லிடப்பேசிக்கு ஒரு முறை பயன்படுத்தும் குறியீட்டு எண் வந்து அதனைத் தெரிவித்த பிறகுதான் பதிவு செய்யப்படுவா். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை இன்னும் சில நாட்களுக்கு நடத்தியிருக்க வேண்டும். புதிய மசோதாக்களை சட்டப்பேரவை உறுப்பினா்கள் படித்துப் பாா்க்கக் கூட நேரமில்லை என்றாா் ரகுபதி.

இதில், ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினா் சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்ட திமுகவினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.