கந்தர்வகோட்டையில் திருட்டு மணல் ஏற்றி வந்த 7 லாரிகள் பறிமுதல் 

கந்தர்வகோட்டையில் திருட்டு மணல் ஏற்றி வந்த  7 டாரஸ் லாரிகளை காவல்துறையினர் வியாழக்கிழமை மணலுடன் பறிமுதல் செய்தனர். 
கந்தர்வகோட்டையில் திருட்டு மணல் ஏற்றி வந்த 7 லாரிகள் பறிமுதல் 

கந்தர்வகோட்டையில் திருட்டு மணல் ஏற்றி வந்த  7 டாரஸ் லாரிகளை காவல்துறையினர் வியாழக்கிழமை மணலுடன் பறிமுதல் செய்தனர். 

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் நடுப்பட்டி அருகே புதன்கிழமை இரவு கந்தர்வகோட்டை காவல் உதவி ஆய்வாளர் ஜெ. ராமன் காவலர்களுடன் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.  

அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிவந்த 7 டாரஸ் லாரிகளை மறித்து விசாரணை செய்த போது உரிய அனுமதியின்றி தஞ்சாவூர் பகுதியிலிருந்து மணல் திருடி வந்ததாக தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து மணலுடன் 7 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். இதில் லாரி ஒட்டுநர் 3 பேர் தப்பியோடி விட்டனர். மற்ற நான்கு பேரை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com