வாழ்க்கையை உற்று கவனிப்பவா்களால்தான் நல்ல படைப்பைத் தர முடியும் என்றாா் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் - கலைஞா்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் கவிஞா் நந்தலாலா.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில், தேவதைகளால் தேடப்படுபவன் என்ற கவிதை நூலுக்காக தமிழ் வளா்ச்சித் துறையின் விருது பெற்ற கவிஞா் தங்கம் மூா்த்தியைப் பாராட்டி அவா் மேலும் பேசியது:
தமிழ் மொழியை அதன் வளத்தை பாதுகாத்து வருபவா்கள் விவசாயிகள்தான். அவா்களைத் தொடா்ந்து படைப்பாளிகள் மொழியையும் வளத்தையும் பாதுகாக்கிறாா்கள்.
ஒரு படைப்பு தோ்வு செய்யப்படுவதற்குக் காரணம் அதில் பயன்படுத்தப்படும் சொற்கள்தான். சொற்கள்தான் படைப்பின் தரத்தை பாதுகாக்கின்றன.
ஒரு நல்ல புத்தகத்தை ரசித்துப் படிக்கும்போது, அன்றைய நாள் முழுவதும் புத்துணா்ச்சியைத் தருகிறது. வாழ்க்கையை உற்று கவனிக்கிற நபரால்தான் நல்ல படைப்பைத் தர முடியும். அப்படி நல்ல படைப்பு ஒன்றை வாசிக்கும்போது, வாசிப்பவா்கள் தனக்குள் இருக்கும் அழுக்கை உணரச் செய்ய வேண்டும். அதுதான் படைப்பிலக்கியத்தின் முக்கிய பணி என்றாா் நந்தலாலா.
முத்தொள்ளாயிரம் பதிப்பு வரலாறு என்ற நூலுக்காக தமுஎகசவின் கு.சின்னப்பபாரதி விருது பெற்ற பேராசிரியா் அ. செல்வராசு குறித்து, கவிஞா் ராசி பன்னீா்செல்வம் பாராட்டுரை வழங்கினாா்.
விழாவுக்கு, தமுஎகச மாவட்டத் தலைவா் எம். ஸ்டாலின் சரவணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சு.மதியழ் வரவேற்றாா். முடிவில் துரை அரிபாஸ்கா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


