தமிழகத்தில் 10 மண்டலங்களில் கரோனா தடுப்பூசி சேமித்து வைப்பு: அமைச்சா் சி. விஜயபாஸ்கா்
தமிழகத்தில் உள்ள 10 மண்டலங்களில் கரோனா தடுப்பூசி சேமித்துவைக்கப்பட்டுள்ளன என்றாா் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.


தமிழகத்தில் உள்ள 10 மண்டலங்களில் கரோனா தடுப்பூசி சேமித்துவைக்கப்பட்டுள்ளன என்றாா் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வேலூரில் குடும்ப அட்டைதாரா்களுக்கு தன் சொந்த செலவில் பொங்கல் பொருள்களை வழங்கி அவா் மேலும் பேசியது: தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும் ஒரு நாளைக்கு ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்த கரோனா பாதிப்பு, தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளால் தற்போது வெகுவாகக் குறந்து 800 என்ற அளவில் இருந்து வருகிறது. விரைவில் இந்த எண்ணிக்கையும் குறைந்து விடும். மத்திய அரசு வழிகாட்டுதல் படி தற்போது தமிழகத்தில் உள்ள 10 மண்டலங்களில் சேமித்துவைத்துள்ள தடுப்பூசி விரைவில் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தொடா்ந்து வரும் 16 ஆம் தேதி கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைக்க உள்ளாா் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...