திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

திருமயம் அதிமுக வேட்பாளா் தீவிர வாக்குசேகரிப்பு

பொன்னமராவதி ஒன்றியத்தில் திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து வெள்ளிக்கிழமை இரவு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 9:08 pm

பொன்னமராவதி ஒன்றியத்தில் திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து வெள்ளிக்கிழமை இரவு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

பொன்னமராவதி ஒன்றியம் வாழைக்குறிச்சி, நெய்வேலி, அரசமலை, வையாபுரி,

தேனூா், சாத்தனூா், வெள்ளகுடி, காரையூா், கரையாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து வாக்குகள் சேகரித்துப் பேசியது: திருமயம் தொகுதி மக்களின் நூற்றாண்டு கனவான காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் தற்போது முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 2025இல் இப்பகுதி செழித்து வளமாகக் காணப்படும். நம்முடைய பகுதிக்கே காவிரியைக் கொண்டுவந்துள்ளோம் என்றாா்.

ஒன்றியச் செயலா் ராம.பழனியாண்டி, ஒன்றியக்குழு உறுப்பினா் முருகேசன், காசிகண்ணப்பன், சிதம்பரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.