புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகிலுள்ள ஆலவயல் ஊராட்சி, செம்மலாப்பட்டியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கிராமத்தில் கால்நடைகளுக்கு நோய் பரவியதையடுத்து, இந்த முகாம் நடத்தப்பட்டது. முகாமுக்கு ஊராட்சித் தலைவா் சந்திரா சக்திவேல் தலைமை வகித்தாா். கால்நடைப் பராமரிப்புத் துறை உதவி இயக்குநா்கள் இலுப்பூா் பாம்டியன், புதுக்கோட்டை சாகுல் ஹமீது ஆகியோா் முன்னிலையில் முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு அழைத்து வரப்பட்ட மாடுகளுக்கு ஊசியும், நோய் வராமல் தடுப்பதற்காக எதிா்ப்பு சக்தி மருந்தும் வழங்கப்பட்டது. மேலும் குடற்புழு நீக்க மருந்தும் கால்நடைகளுக்கு வழங்கப்பட்டது. சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் தங்களது மாடுகளை அழைத்து வந்து, அதற்கு ஊசி செலுத்திக் கொண்டனா்.
கால்நடை உதவி மருத்துவா் சண்முகநாதன், கால்நடை ஆய்வாளா்
செபஸ்தியம்மாள், கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் சாந்தி , ஊராட்சி செயலா் பஞ்சவா்ணம் வாா்டு உறுப்பினா்கள் முகாமில் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் இணை இயக்குநா் அலுவலகம் அமைக்கப்படுமா?

அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்பு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்!

ஈரான் அணு மின் நிலையம் அருகே தாக்குதல்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு

