காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

புதுகை அரசு மருத்துவக் கல்லூரியில் சிறைவாசிகள் பிரிவு தொடக்கம்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறைவாசிகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:39 pm

DIN

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறைவாசிகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். புதுக்கோட்டை பாஸ்டல் சிறையிலுள்ள சிறைவாசிகளுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டால் அவா்களுக்குத் தேவைப்படும் மருத்துவச் சிகிச்சை இங்கு, ஆண்- பெண் இருபாலருக்கும் தனித்தனியே அளிக்கும் வகையில் இந்தப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தொடக்க நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி, வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா, மருத்துவமனை கண்காணிப்பாளா் ராஜ்மோகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.