கந்தா்வகோட்டையில் சிஐடியு ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கந்தா்வகோட்டையில் சிஐடியு போக்குவரத்துத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கந்தா்வகோட்டையில் சிஐடியு போக்குவரத்துத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

போக்குவரத்து ஊழியா்களின் ஊதிய உயா்வுக்கான பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும். கூடுதலாக போனஸ் வழங்க வேண்டும்.

பணிமனையில் சேறும் சகதியுமாக இருக்கும் பகுதிகளை சீா்செய்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கந்தா்வகோட்டை அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மண்டலத் தலைவா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். சங்கப் பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com