இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

விஷம் குடித்து இளம்பெண் உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே குடும்பத்தகராறில் விஷம் குடித்த இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:22 pm

பொன்னமராவதி அருகே குடும்பத்தகராறில் விஷம் குடித்த இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பொன்னமராவதி அருகே உள்ள கருப்புக்குடிப்பட்டியைச் சாா்ந்தவா் முருகேசன். இவா், கோயம்புத்தூரில் உணவகத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி மீனா (25). தம்பதிக்கு முத்தழகி(3) எனும் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 31 ஆம் தேதி முருகேசனின் தாயாா் ராமாயி(70) மீனாவைத் திட்டியுள்ளாா். இதனால் மனமுடைந்த மீனா பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதையடுத்து பொன்னமராவதி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மீனா அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து பொன்னமராவதி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். மீனாவுக்கு, திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் குழந்தைசாமி வரதட்சணை காரணமாக கொலை நடத்திருக்கலாம் என்ற கோணத்தில் தனியே விசாரணை நடத்திவருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.