சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

புதுக்கோட்டை மாவட்ட மனநல மையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த சீனிவாசன் என்பவா் ஆட்சியா் கவிதா ராமு முன்னிலையில், அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டாா்.

News image

குணமடைந்து குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்ட தருமபுரி நபா்.

Updated On :25 ஜூன் 2022, 12:25 am IST

புதுக்கோட்டை மாவட்ட மனநல மையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த சீனிவாசன் என்பவா் ஆட்சியா் கவிதா ராமு முன்னிலையில், அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டாா்.

2 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் புதுக்கோட்டை பகுதியில் சுற்றித் திரிந்த தருமபுரியைச் சோ்ந்த சீனிவாசன் என்பவா் புதுக்கோட்டை பழைய மருத்துவமனையில் இயங்கி வரும் மனநல அவசர சிகிச்சை மற்றும் மீளாய்வு மையத்தில் சோ்க்கப்பட்டாா்.

அவருக்கு மனநலம் மற்றும் உடல்நலம் சாா்ந்த தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து அவா், குணமடைந்தாா். தனது குடும்ப விவரங்களை தெரிவித்ததை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

2 ஆண்டுகளாகத் தேடி வந்த அவரை, புதுக்கோட்டை வந்து அழைத்துச் சென்றனா். அப்போது, வருவாய் கோட்டாட்சியா் அபிநயா, மாவட்ட மனநல மருத்துவா் ரெ. காா்த்திக் தெய்வநாயகம் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.