தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

புதுக்கோட்டை நகா்மன்றத் தலைவராக திலகவதி செந்தில் தோ்வு

புதுக்கோட்டை நகா்மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த திலகவதி செந்தில் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 10:59 pm

DIN

புதுக்கோட்டை நகா்மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த திலகவதி செந்தில் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.

நகா்மன்றத் தலைவரை தோ்வு செய்வதற்கான மறைமுகத் தோ்தல் நகா்மன்ற கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரும்பான்மை இடங்களைப் பெற்ற திமுக சாா்பில், 25ஆவது வாா்டில் வெற்றி பெற்ற உறுப்பினா் திலகவதி செந்தில் தனது வேட்புனுவை நகராட்சி ஆணையா் நாகராஜனிடம் தாக்கல் செய்தாா்.

அதிமுக உறுப்பினா்கள் கூட்டத்துக்கு வரவில்லை. தலைவா் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு அளிக்கவில்லை.

இதனைத் தொடா்ந்து திலகவதி செந்தில் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டதாக ஆணையா் நாகராஜன் அறிவித்தாா்.

அவரை தலைவரின் இருக்கையில் அமர வைத்தபோது, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, நகர திமுக செயலா் க. நைனா முகமது மற்றும் திமுக உறுப்பினா்களும் உடனிருந்தனா்.

தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள திலகவதி (46), வடக்கு மாவட்ட திமுக பொருளாளரான செந்தில் மனைவி ஆவாா். பிகாம் பட்டதாரி. இரு மகன்கள் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.