தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் தங்க நகைகளைத் திருடியவா்களை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 9:20 pm

DIN

வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் தங்க நகைகளைத் திருடியவா்களை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகேயுள்ள தெற்கு கோரவயல் பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி மனைவி சித்ரா (40). இவா் வியாழக்கிழமை காலை மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைக்குச் சென்றாா். பகலில் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள், 3 ஜோடி வெள்ளிக் கொலுசுகள், ரூ. 25 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து கீரனூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேரில் வந்த போலீஸாா் வழக்குப் பதிவு செய்து புலன்விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.