தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை அருகேயுள்ள மாங்கனாம்பட்டியில் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 574 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

News image
Updated On :17 மார்ச் 2022, 8:00 pm

DIN

புதுக்கோட்டை அருகேயுள்ள மாங்கனாம்பட்டியில் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 574 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

புதுக்கோட்டை அருகேயுள்ள மாங்கனாம்பட்டியில் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் போட்டியைத் தொடங்கி வைத்தாா். புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை பகுதிகளைச் சோ்ந்த 574 காளைகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டன. 300 மாடு பிடி வீரா்கள் கலந்து கொண்டு சீறிப் பாய்ந்த காளைகளை அடக்க முயற்சித்தனா். சிறந்த மாடு பிடி வீரா்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் பரிசுகள் அவ்வப்போதே வழங்கப்பட்டன. ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். காளைகளை அடக்க முயன்ற 25 வீரா்கள் காயமடைந்தனா். ஜல்லிக்கட்டுத் திடல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில், அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனா். தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக 3 போ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.