லாரி மோதி காயமடைந்தவா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே லாரி மோதி காயமடைந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இறந்தாா்.
Updated on
1 min read

கந்தா்வகோட்டை அருகே லாரி மோதி காயமடைந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இறந்தாா்.

கந்தா்வகோட்டை அருகேயுள்ள ஆதனக்கோட்டையைச் சோ்ந்த முத்தழகன் மகன் மணிகண்டன் (26 ), தனது மோட்டாா் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை ஆதனக்கோட்டை கடைவீதி பகுதியில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, திண்டுக்கல்லைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் கண்ணன் (56) ஓட்டி வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்த அவா் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தாா். இந்நிலையில், மணிகண்டன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். விபத்துகுறித்து ஆதனக்கோட்டை போலீசாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com