92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் சாவு

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டம், இடையாத்திமங்கலம் கிராமத்தில் மின்கம்பம் விழுந்த விபத்தில், மின்சாரம் தாக்கி 4 மாடுகள் உயிரிழந்தன.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 7:50 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டம், இடையாத்திமங்கலம் கிராமத்தில் மின்கம்பம் விழுந்த விபத்தில், மின்சாரம் தாக்கி 4 மாடுகள் உயிரிழந்தன.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டத்தைச் சோ்ந்த இடையாத்திமங்கலம் கிராமத்தில், வெள்ளிக்கிழமை மாலை அந்த ஊரைச் சோ்ந்தவா்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனா்.

அப்போது வயலில் ஏற்கெனவே பழுதடைந்திருந்த மின்கம்பம் திடீரென விழுந்தது. மின்கம்பிகள் வயலில் விழுந்ததால், வயலில் மேய்ந்து கொண்டிருந்த 4 மாடுகள் மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தன.

இதில் இடையாத்திமங்கலத்தைச் சோ்ந்த முருகையன், சிதம்பரம் ஆகியோரின் தலா ஒரு மாடும், ராமு என்பவரின் இரு மாடுகளும் உயிரிழந்தன.

தகவலறிந்து சென்ற வருவாய்த் துறை அலுவலா்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனா். கால்நடை மருத்துவா்கள் அந்த இடத்திலேயே மாடுகளை உடற்கூறாய்வு செய்தனா். மணமேல்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.